Monday, November 19, 2007

நீ . . . . . .

யதார்தமாய்ப் பார்க்கையில்
எந்த வித பாதிப்புமில்லை
கண்களைச் சுருக்கிப்
பார்த்த போது கூட
கவனம் சிதறவில்லை
ஓரப் பார்வையில்
பார்த்த போது கூட ஒரளவுதான்
பாதிப்புத் தெரிந்தது
நீ
பார்க்காமல் போன போதுதான்
பாவிமனம் என்ன பாடுபடுகிறது

ஆனந்த மழை

ஒரு நாள் உன்னை விழிகள் பார்க்க
இது யார் என இமைகள் கேட்க்க
இவள் தான் உன் இதயம் என்றது காதல்
உயிரை திறந்துவிடு புரியும்
உனக்குள் இருப்பது யார் தெரியும்
மனதில் எனது உருவம் விரியும் காதல்
கொல்லாமல் கொல்லும் காதல் பொல்லாதது
ஜில் என்ற தீயில் ஜீவன் நனைகின்றது
எங்கே எங்கே நீ எங்கே

உன்னை எண்ணி துடிக்கும் துவளும் இதயம் தினசரி
இப்படி தான் யவர்க்கும் இருக்கும் காதல் கனல் விழி
மேகத்தை போல வந்தேன் பற்றி எரிந்தேன்
உயிரோடு வாழ்ந்த போதும் மூச்சு ம்றந்தேன்
நீ வந்தபோது தானே என்னை அறிந்தேன்
கண்ணிரில் ஓலை விட்டு காத்து கிடந்தேன்
மறு ஜென்மம் இருவர் உயிரும் இணைந்து இருந்தது
இந்த ஜென்மம் உனது மனது உறவை மறந்தது
அழியாத காதல் சின்னம் கட்டி முடித்தேன்
அடையளம் காட்ட இன்று உன்னை அழைத்தேன்
வரலாற்றில் நேற்று நமது பேரை படித்தேன்
நூற்றண்டு தாண்டி உன்னை கண்டுபிடிதேன்

எங்கே எங்கே எங்கே எங்கே எங்கே
நீ
எங்கே

நீ எப்படி உணர்வாய். . . . .

நீண்ட நாட்க்களாக
கவிதை எழுதவில்லை
உடல் சொல்வது கேட்பதில்லை
மனம் சஞ்சலப் படுகிறது
எழுத்துக்கள் பிழையாய் வருகிறது
நீ எங்கிருக்கிறாய்?
எப்பொழுது வருவாய்?
நான் உனக்காக காத்திருப்பதை
நீ எப்படி உணர்வாய். . . . .

Sunday, November 18, 2007

நடை பிணம்

ஊருக்கு போய் வருகிறேன்
என்பதை நீ கூறியும்
மௌனத்தோடு நகர்ந்தேன்
இருப்பினும்
இதயம் சினுங்கத் தொடங்கியது
இனி எத்தனை நாட்கள்
நடை பிணமாய்
அலைய வேண்டுமோ

Friday, November 16, 2007

போடா பொறுக்கி

நீ என்னிடம் காதலைச்சொன்னதும்
நான் ஒன்றும் சொல்லாமல்
ஓடிப்போய் ஒளிந்துகொண்டு
எட்டிப் பார்த்தேன்

எதையோ பொறுக்குவது மாதிரி
நீ குனிந்து கொண்டிருந்தாய்

என்ன பொறுக்குகிறாய்
என்றேன்

உன் காதலைத்தான்
நான் உன்னிடம் காதலைச்
சொன்னால்பதிலுக்கு
நீ என்னிடம் சொல்லாமல்
இப்படியா தரையில் சிந்திப்
பொறுக்கிக் கொள்ளச் சொல்வாய்
என்றாய்

போடா பொறுக்கி

நான் என்ன பதில் சொல்ல?

எனக்குள் உன் நினைவுகள்
நெஞ்சுக்குள் சிக்கிய நெருப்பு துண்டுகளாய்
விழுங்கவும் முடியாமல் வெளியேத்ததவும் முடியாமல்
என் உணர்வுகளை பொசுக்கி கொண்டு
நாள் முழுவதும் என் மனத்தில் சுழன்று அடித்தபடி
இரவுகளில் இன்னும் அதிகமாய் எரியும் தீயை
என் கண்ணீரால் கொஞ்சம் தனிக்கிறேன்
இதையெலாம் புரிந்து கொள்ளாமல்
உன்னை மறந்து விட சொல்பவர்களுக்கு
நான் என்ன பதில் சொல்ல

ஆராத ரணம்

என் உயிரில் ஆராத ரணமாய்
உன் நினைவுகள்
ஆனால் மீண்டும் மீண்டும்
அதை கிரிவிட்டு
அந்த வலியில் சுகம் காண்கிறது
என் மனது

இணை துருவங்கள்

மழை நாட்களில்
ஆவி பறக்கும்
இரு தேநீர் கோப்பைகளுடன்
உன்னருகே நான்...நிமிரவும் நேரமின்றி
கணிப்பொறியில்
கண்பதித்து நீ!

ரயில் பயணங்களில்
எதிர் இருக்கை மழலையின் சிரிப்பை
உன்னுடன் பகிரத்துடித்தபடி நான்..
செல்பேசி பண்பலையில்
இருவிழி மூடிமிதந்துகொண்டு நீ!

விடுமுறை மதியம்..
சதுரங்கப் பலகையின்
இரு முனைகளிலும்
காய் நகர்த்தியபடி நான்..
பட்டியலில் இல்லாசேனல் ஒன்றின்
மல்யுத்தம் பார்க்கும்
உற்சாகத்தில் நீ!

ஊடல் பொழுதுகளில்..
சப்தங்கள் அர்த்தமிழக்கும்
மௌனத் திரைக்குப் பின்னே
நான்......!
சஹாரவைத் தோற்கடிக்கும்
அக்னி வார்த்தைகளுடன் நீ......!

புத்தக கண்காட்சியில்..
இரு கை கொள்ளாமல்
கவிதைத் தொகுப்புகளுடன்
தவித்திருப்பேன் நான்..
கவனம் கலையாமல்
உலகப் பொருளாதாரம்
வாசித்துக்கொண்டிருப்பாய் நீ!

இப்படி
எத்தைனையோ தருணங்களில்
உன்னையும் அறியாமல்
என்னை உடைத்திருக்கிறாய்!
சில்லுகளை சேகரித்துக் கொண்டு
உன்னையே நெருங்குகிறேன் நான்
நமக்கிடையேயான இந்த
மாயத்திரையை அகற்ற
நான் போராடியே ஆக வேண்டும்
அன்பெனும் ஆயுதம் ஏந்தி!

சாய்ரா பானு

நீ.................நான்

நீ
காற்றை சுவாசிப்பதைப் போல்
என்னை நேசிக்கிறாய்
நான்
உன்னை நேசிப்பதால்தான்
காற்றையே சுவாசிக்கிறேன்!

Thursday, November 15, 2007

அதிசய அன்னம் நீ

என் செய்கைகளில் இருந்து
காதலை மட்டும் எடுத்துக்கொண்டு
காமத்தை உதறிவிடுகிற
அதிசய அன்னம் நீ.

இப்படிக்கு இறைவன்

இந்தக் காதல் கடிதம்
கொண்டு வருபவனைக்
காதலிக்கவும்.

இவன் உனக்காகப்
படைக்கப்பட்டவன்

இப்படிக்கு
இறைவன்

ஞாபகம் இல்லை

நான் எப்போது
உன்னை நினைக்க
ஆரம்பித்தேனோ
அப்போதே
என்னை மறந்துவிட்டேன்
அதனால்தான் என் காதலை
உன்னிடம் சொல்லவேண்டும்
என்கிற ஞாபகம்கூட
எனக்கு வரவில்லை

"பிரிவுகள் எல்லாம் நிரந்தரமல்ல"

கண்கள் மூடி உன் சிந்தனையில் லயித்திருந்தேன்

காற்று வந்து என் காதுக்குள் ஏதோ முணுமுணுக்க

நினைவாய் என்னுள் மறைந்த நீ நிஜமாய் எதிரில்

கால்கள் பின்னிக்கொள்ள தள்ளாடித் தவித்தேன்

நெருங்கி கைபிடித்து நெஞ்சோடு சேர்த்தணைதாய்

கன்னம் தொட்டு என்னை உன் புறம் திருப்பினாய்

முத்தமிட்டு கண்ணீர் முத்துக்களை உலரவைத்தாய்

நான் மயங்கிய நேரம் மடிகொடுத்து தாலாட்டினாய்

கலங்கிய போது கட்டியணைத்து ஆறுதல் சொன்னாய்

முன்நாள் பிரிவின் துயரம் அந்நாள் என்னில் இல்லை

கையசைத்து விடை கொடுத்தாய்

மீண்டும்........................... கண்கள் மூடினேன்

காற்று வந்து காதுக்குள் பேசியது


"பிரிவுகள் எல்லாம் நிரந்தரமல்ல"

என் காதல் கொஞ்சம் தின்றாய் !

நீயும் நானும் ஒரு திகில் படம் பார்த்துவிட்டு வெளியே வருகையில், 'படத்தில் திகில் காட்சிகள் ரொம்ப அதிகம்' என்றாய்.

'ஆமாம். மொத்தம் இருபத்தேழு! என்றேன்.

'திகில் காட்சிகளை எல்லாம் எண்ணினாயா?' என்றாய் ஆச்சர்யத்தோடு.
'இல்லையில்லை... ஒவ்வொரு திகில் காட்சிக்கும் நீ பயந்துபோய் என் தோளில் முகம் புதைத்துக்கொண்டாய் அல்லவா... அதை எண்ணினேன்' என்றேன்.

'ச்சீ!' என்று வெட்கப்பட்டு முகத்தை உன் கைகளில் புதைத்துக்கொண்டாய்.

'என்ன அநியாயம் இது. பயத்துக்கு மட்டும் அன் தோள்கள் வேண்டும் உனக்கு. ஆனால், வெட்கம் வந்தால் மட்டும் வேண்டாமாக்கும்' என்றேன்.

'பயம் வரும்போது உன் தோளில் முகம் புதைத்துக் கொண்டால், உடனே என் பயம் போய்விடும். ஆனால், வெட்கம் வரும்போது, அப்படிச் செய்தால், என் வெட்கம் இன்னும் அதிகமாகிவிடுமே! என்றாய். என் காதல் கொஞ்சம் தின்றாய் !

அம்மா... அப்பா...? நீ... நான்....

உன்னை முதலில் சும்மதான் பார்த்தேன்!
அப்புறம் சும்மா சும்மா பார்க்க ஆரம்பித்தேன். நான் பார்க்கிறேன் என்பதற்க்காக நீயும் பார்க்க ஆரம்பித்த பிறகு உன்னைக் காதலித்தால் என்ன என்று தோன்ற ஆரம்பித்தது.

ஆனால், உன்னை காதலிக்கலாமா வேண்டாமா என்பதை என் அப்பாவை கேட்டுத்தான் முடிவெடுக்க வேண்டும் ஏன் என்றால் என் அப்பா என்க்கு மிகச் சிறந்த நண்பன்.

வீட்டில் சாப்பிட்டுக் கொண்டிருக்கையில் 'அப்பா... நான் காதலிக்க்லாம்னு இருக்கேன்ப்பா' என்றேன்.
'அய்யோ பாவம்!' என்றார் அப்பா.
'ஏம்பபா...?
'டேய்... நானும் இப்படிதான் வெவரம் தெரியாம, உங்கம்மாவைக் காதலிச்சுக் கல்யாணம் ப்ண்ணினேன். ஆனா, இவ பண்ற இம்சை இருக்கே... தாங்க முடியலை. சரி' காதலிச்சுச் தொலைச்சுட்டமே... வேற என்ன பண்றதுனு வெச்சு வாழ்ந்துட்டிருக்கேன். இதுவே எங்க அம்மா - அப்பா பார்த்து நடத்தி வெச்ச கல்யாணம்னு வெச்சுக்க... 'சரிதான் போடீ!'னு எப்பவோ இவளைப் பிறந்த வீட்டுக்கு அனுப்பியிருப்பேன்... இதுக்குமேல 'காதலிக்கலாமா... வேண்டாமா?'னு நீயே யோசிச்சு ஒரு நல்ல முடிவா எடுத்துக்க!' என்றார் சிரித்தபடியே,

சாப்பாடு போட்டுக்கொண்டு இருந்த என் அம்மா, அப்பாவின் தலையில் செல்லமாகக் குட்டிவிட்டு 'அப்படி என்ன இம்சை ப்ண்றேன் உங்களை ? " என்று
சண்டைபோட ஆரம்பித்தார்.

அந்த அழகான சண்டையை வேடிக்கை பார்த்துக் கொண்டு இருக்கும் போதே முடிவுசெய்துவிட்டேன்... உன்னைக் காதலித்துக் கல்யாணம் செய்துகொள்வதென்று!

Sunday, November 11, 2007

ஒரு ஊர்ல ஒரு தேவதை

எழும்பூர் - தாம்பரம் மீட்டர்கேஜ் ரயில் பாதையில் ஓடிய ஒரு ரயிலில்தான் இரண்டு வருடங்களுக்கு முன்பு உன்னைப் பார்த்தேன். பார்த்த மாத்திரத்தில் என் இதயத்தின் கதவுகளை நெட்டித் தள்ளி, உள்ளே நுழைந்து சம்மணம் போட்டு உட்கார்ந்துகொண்டாய்.

நீ கல்லூரி ஒன்றில் படிக்கப் போய்க்கொண்டு இருக்கிறாய் என்பதைத் தவிர, உன்னைப் பற்றி வேறெதுவும் தெரிந்துகொள்ள முடியவில்லை மூன்று நான்கு மாதங்கள் ஆனபின்னும்.

என்னைப் போலவே, உனக்கும் என்னைப் பிடித்திருக்கிறது என்று முழுவதும் நான் நம்பிய ஒரு நாளில்.... ஆசையோடு நான் உன்னிடம் பேச வந்தேன். அலட்சியமாக விலகிப் போனாய் நீ.

ஏன் அப்படிப் போனாய் என்று நான் யோசித்துக்கொண்டு இருந்த நாட்களிலேயே உன் கல்லூரிக் காலம் முடிந்து, நீ ரயிலில் வருவதும் நின்று விட்டது.

நீ வருவதில்லை என்றாலும் உன்னோடு பயணித்த ஒவ்வொரு பயணத்தையும் இந்த ரயில்கள் எனக்கு ஞாபகப்படுத்திக்கொண்டே இருந்தன தினம் தினம்.

அத்தகைய ரயிலைத்தான்... இன்னும் சற்று நேரத்தில் வரப்போகிற ஒரு சிறப்பு ரயிலோடு நிருத்தப் போகிறார்கள் என்பதை அறிந்தபோது... இந்த ரயிவே அதிகாரிகளை எல்லாம் வரிசையாக நிற்கவைத்து, கருங்கற்களை அள்ளி அவர்கள் தலையில் கொட்ட வேண்டும் போலிருந்தது எனக்கு.

மாலைகள் சூட்டிய அந்தக் கடைசி ரயிலும் வந்து நின்றது. நானும் ஏறினேன். வண்டி நகர்கையில் யாரோ ஓடிவந்து ஏற... அய்யோ... நீ! ஒருவரை ஒருவர் பார்த்துக்கொண்டு அமைதியாக அமர்ந்திருந்தோம். பேசத் துடித்தன உதடுகள். ஆனால், என்ன பேசுவது?

ஓடும் ரயிலின் சத்ததை மீறிய மௌனத்தோடு நகர்ந்த பயணம் தாம்பரத்தில் முடிந்தபோது அனைவரும் இறங்கிப் போனார்கள். நீ மட்டும் அப்படியே அமர்ந்திருந்தாய். உன் அருகில் வந்தேன். எழுந்து நின்றாய்.

'ரயில் பார்க்க வந்தீங்களா?' என்றேன்.

'இல்லை... உங்களைப் பார்க்கத்தான் வந்தேன்' என்றாய் கலங்கக் காத்திருக்கும் கண்களோடு.

தாங்க முடியவில்லை என்னால், 'அப்படியே... அப்படியே கண்களைச் சுற்றி அந்த ரயிலைப் பார்த்தேன். அதில் ஒரு மூலையில் நான் எப்போதோ எழுதியிருந்த உன் பெயரும் என் பெயரும் நம்மைப் பார்த்தன.

தன் பயணத்தை முடித்துக்கொள்ளப்போகிற நேரத்தில் நம் பயணத்தைத் தொடங்கிவைத்த ரயிலைத் தட்டிக்கொடுத்தபடி இறங்கி... ' கொஞ்சம் தண்டவாளத்தில் நடக்கலாம் ' என்று உன்னை அழைத்துக்கொண்டு தண்டவாளத்தில் நடந்தேன்.

எங்களை இணைத்துவிட்டு, இன்னும் சற்று நேரத்தில் பிரியப் போகிற தண்டவாளங்களே... உங்களைக் காலம் மறந்தாலும் நாங்கள் மறக்க மாட்டோம். எங்களுக்குள் எப்போதும் ஓடிக் கொண்டிருக்கும் ஒரு மீட்டர் கேஜ் ரயில்!

தபூ சங்கர்