Thursday, November 15, 2007

என் காதல் கொஞ்சம் தின்றாய் !

நீயும் நானும் ஒரு திகில் படம் பார்த்துவிட்டு வெளியே வருகையில், 'படத்தில் திகில் காட்சிகள் ரொம்ப அதிகம்' என்றாய்.

'ஆமாம். மொத்தம் இருபத்தேழு! என்றேன்.

'திகில் காட்சிகளை எல்லாம் எண்ணினாயா?' என்றாய் ஆச்சர்யத்தோடு.
'இல்லையில்லை... ஒவ்வொரு திகில் காட்சிக்கும் நீ பயந்துபோய் என் தோளில் முகம் புதைத்துக்கொண்டாய் அல்லவா... அதை எண்ணினேன்' என்றேன்.

'ச்சீ!' என்று வெட்கப்பட்டு முகத்தை உன் கைகளில் புதைத்துக்கொண்டாய்.

'என்ன அநியாயம் இது. பயத்துக்கு மட்டும் அன் தோள்கள் வேண்டும் உனக்கு. ஆனால், வெட்கம் வந்தால் மட்டும் வேண்டாமாக்கும்' என்றேன்.

'பயம் வரும்போது உன் தோளில் முகம் புதைத்துக் கொண்டால், உடனே என் பயம் போய்விடும். ஆனால், வெட்கம் வரும்போது, அப்படிச் செய்தால், என் வெட்கம் இன்னும் அதிகமாகிவிடுமே! என்றாய். என் காதல் கொஞ்சம் தின்றாய் !

No comments: