Thursday, November 15, 2007

"பிரிவுகள் எல்லாம் நிரந்தரமல்ல"

கண்கள் மூடி உன் சிந்தனையில் லயித்திருந்தேன்

காற்று வந்து என் காதுக்குள் ஏதோ முணுமுணுக்க

நினைவாய் என்னுள் மறைந்த நீ நிஜமாய் எதிரில்

கால்கள் பின்னிக்கொள்ள தள்ளாடித் தவித்தேன்

நெருங்கி கைபிடித்து நெஞ்சோடு சேர்த்தணைதாய்

கன்னம் தொட்டு என்னை உன் புறம் திருப்பினாய்

முத்தமிட்டு கண்ணீர் முத்துக்களை உலரவைத்தாய்

நான் மயங்கிய நேரம் மடிகொடுத்து தாலாட்டினாய்

கலங்கிய போது கட்டியணைத்து ஆறுதல் சொன்னாய்

முன்நாள் பிரிவின் துயரம் அந்நாள் என்னில் இல்லை

கையசைத்து விடை கொடுத்தாய்

மீண்டும்........................... கண்கள் மூடினேன்

காற்று வந்து காதுக்குள் பேசியது


"பிரிவுகள் எல்லாம் நிரந்தரமல்ல"

No comments: