Monday, November 19, 2007

நீ . . . . . .

யதார்தமாய்ப் பார்க்கையில்
எந்த வித பாதிப்புமில்லை
கண்களைச் சுருக்கிப்
பார்த்த போது கூட
கவனம் சிதறவில்லை
ஓரப் பார்வையில்
பார்த்த போது கூட ஒரளவுதான்
பாதிப்புத் தெரிந்தது
நீ
பார்க்காமல் போன போதுதான்
பாவிமனம் என்ன பாடுபடுகிறது

No comments: