Friday, November 16, 2007

போடா பொறுக்கி

நீ என்னிடம் காதலைச்சொன்னதும்
நான் ஒன்றும் சொல்லாமல்
ஓடிப்போய் ஒளிந்துகொண்டு
எட்டிப் பார்த்தேன்

எதையோ பொறுக்குவது மாதிரி
நீ குனிந்து கொண்டிருந்தாய்

என்ன பொறுக்குகிறாய்
என்றேன்

உன் காதலைத்தான்
நான் உன்னிடம் காதலைச்
சொன்னால்பதிலுக்கு
நீ என்னிடம் சொல்லாமல்
இப்படியா தரையில் சிந்திப்
பொறுக்கிக் கொள்ளச் சொல்வாய்
என்றாய்

போடா பொறுக்கி

No comments: